இன்றைய தினமும் சில ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் அதிகளவான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்ளத்தின் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பணிக்கு சமூகம் தந்துள்ள ஊழியர்களை கொண்டு சகல அலுவலக ரயில் சேவைகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளததகவும் அவர் குறிப்பிட்டார். போதிய எரிபொருள் கிடைக்காமையால் புகையிரத திணைக்களத்தின் ஊழியர்கள் பணிக்கு சமூகம் தருவதில் பிரச்சினைகளை தோன்றியுள்ளன. ஊழியர்கள் வருகைத்தராததால் சில ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.