முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் இன்று காலை கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முற்பட்டதையடுத்து பொலிசார் அதனைத் தடுக்க முற்பட்டதால் கடும் பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் ஹிருணிகா உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோரை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொலிஸ் நிலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.