தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தெற்குப் பகுதியிலும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.