எதிர்வரும் 6 மாதங்கள் ஐரோப்பாவுக்கு அவதானம் மிக்க காலமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொவிட் வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் அதிகரிப்பை அடுத்தே சுகாதார ஸ்தாபனம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் ஐரோப்பாவில் 20 ஆயிரம் மரணங்கள் பதிவாகின. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் அதிக அவதானம் மிக்க நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. உலகில் கொவிட் தொற்று பாதிப்பில்; நூற்றுக்கு 28 வீதமும், உயிரிழப்பில் 26 வீதமும் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.