கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினமும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 995 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் 6 பேர் வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். அதில் லெபனானில் இருந்து வருகைதந்த ஒருவரும், கனடாவில் இருந்து வருகைதந்த ஒருவரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகைதந்த நால்வரும் உள்ளடங்குகின்றனர். 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 71 பேர் விசேட வைத்திய காண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.