கடந்த 24 நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் வர்த்தகத்தோடு தொடர்புடைய 10 ஆயிரத்து 968 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்து 140 பேர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் 8 கிலோகிராம் அளவிலான ஹெரோயினும் 295 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. குறித்த சுற்றிவளைப்புக்களின் போது ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.