நேற்றைய தினத்தில் மாத்திரம் இந்தியாவில் 2 ஆயிரத்து 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்னர். அதற்கமைய இதுவரை 11 ஆயிரத்து 921 கொரோனா மரணங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 10 ஆயிரத்து 974 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதுவரை 3 இலட்சத்து 54 ஆயிரத்து 161 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 22 இலட்சத்து 8 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 132 மரணங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாம் இடத்திலுள்ள பிரேசிலில் 9 இலட்சத்து 28 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரத்து 456 மரணங்கள் பதிவாகியுள்ளன. அடுத்த இடத்திலுள்ள ரஷ்யாவில் 5 இலட்சத்து 45 ஆயிரத்து 458 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்து 284 மரணங்கள் பதிவாகியுள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 82 இலட்சத்து 64 ஆயிரத்து 468 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 46 ஆயிரத்து 135 பேர் மரணித்துள்ளனர். 43 இலட்சத்து 21 ஆயிரத்து 498 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.