கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் வண்டி மற்றும் அதனை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாதம் 19 ம் திகதி மற்றும் 29 ம் திகதி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.