10 வருடங்களாகவும் பதவி உயர்வு பெறாத பொலிஸ் அதிகாரிகளுக்கு துரித கதியில் பதவி உயர்வை பெற்றுத்தருவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செயதியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நீண்டகாலமாக இந்நாட்டில் பொலிஸ் துறையில் சேவையாற்றியவர்களுக்கு எவ்விதமான பதவி உயர்வுகளும் இன்றி ஒரே பதவியில் சேவையாற்றி வருகின்றனர். ஆகையால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் எதுவித பதவி உயர்வு கிடைக்கப்பெறாத அனேகமானோருக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி மற்றும் ஏனைய பதவி உயர்வுகள் தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/cXWZ1-0Bi2Y”]
அரிசியின் விலையை நிலையாக பேணுவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் இங்கு கருத்து தெரிவித்தார்.
“கடந்த காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரித்து சென்றதனால் பொதுமக்கள் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கினர். 2015 ஆம் ஆண்டளவில் நாட்டின் அதி குறைந்த நெல் உற்பத்தி காணப்பட்டது. இதன் காரணமாக வரலாற்றின் முதல் தடவையாக மத்தல விமான நிலையத்திலும் கூட களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் 2015 முதல் 18, 19 வரையிலான காலப்பகுதியில் உர மானியம் நிறுத்தப்பட்டதுடன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் வழங்கப்படாமை, விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைக்காமை போன்ற பல்வேறு காரணங்களால் தரகு மற்றும் இலாபமீட்டும் நோக்கில் அரிசி பெரும்மளவில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் இலங்கையில் விவசாய துறை முழுமையாக முடங்கி போனது. அரிசியின் விலையை நிலையாக பேணுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/_rtvJj3MsmY”]