எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், இன, மத குல பேதமின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் தேசத்தின் கௌரவம் கிடைக்கப்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார். ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிப்பதே, வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடமென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.