போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் வெளியான இடைக்கால தடையுத்தரவு அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை இன்றைய தினம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தொடரப்பட்ட 15 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நால்வர் அடங்கிய நீதிபதிகள் குழாம் மனுக்களை விசாரணை செய்தது. அவற்றை மீள விசாரணை செய்வதற்கென மார்ச் மாதம் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.