இந்தியாவில் மிருக வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டு கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹைதரபாத் பொலிசார் நடத்திய தேடுதல் மூலம் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
உயிரிழந்த மிருக வைத்தியர் 27 வயதுடைய யுவதியென இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்திலுள்ள வர்த்தக கட்டத் தொகுதியொன்றில் வைத்து வைத்தியர் கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை வைத்தியர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நலன்புரி அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.