முதலீட்டு பிரசாரம் மற்றும் சுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டுபாயில் இடம்பெறும் விசேட கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. வருடாந்தம் புதிய சந்தர்ப்பங்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கென பெற்றுக்கொள்வதே எதிர்பார்ப்பாகும். இதனூடாக இலங்கை சுற்றுலாத்துறையை கவர்ச்சி மிக்கதாக்குவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.