இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் வான்பரப்பில் விமானங்கள் பயணிப்பதற்கென நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் அதிகாலை 2.45 மணி முதல் முற்பகல் 11 மணிவரை விமானங்கள் பயணிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடிக்கு கீழ் பயணிக்கவும் பாகிஸ்தான் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.