யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.
வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றமைக்கு தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு வடமாகாண ஆளுநர் தனது நன்றியினை தெரிவித்தார்.
இதேவேளை யாழ் மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கிறது.