மேலும் சில இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது 810 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாடு இடம்பெறும்.
2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 700 பேருக்கு இதுவரை இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இரட்டை பிரஜாவுரிமைக்கென விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.