சுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக்குவதே இதன் பிரதான நோக்கமகும். திட்டத்தின் முதற்கட்டமாக பூக்கன்றுகளை வளர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘நாட்டுக்காக ஒன்றாக இருப்போம்’ வேலைத்திட்டத்தின் கீழ் திட்டம் முன்னெடு;க்கப்பட்டுள்ளது. பூக்கன்றுகளை வளர்ப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப அறிவு மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.