கொழும்பின் சில பகுதிகளில் நாளை இரவு முதல் 18 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை இரவு 9 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை இந்நீர் விநியோகம் அமுலில் இருக்கும். கொழும்பு 13, கொழும்பு 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் இந்நீர் விநியோகத்தடை அமுலாகவுள்ளது. கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.