நைஜீரியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையினால் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களில் வெள்ளபெருக்கு நிலை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் காணப்படுவதால் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.