நாட்டின் ஏற்றுமதி வருமானம் குறைவடைவதனால் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வாகறை பிரதேச செயலக பிரிவில் அம்மந்தனாவெலி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் வெள்ளரிக்காய் உற்பத்திகளை பார்வையிட சென்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வாகறை பிரதேச மக்களின் பிரதான தொழில் மீன் பிடி தொழிலாக இருந்த போதிலும் அவர்கள் விவசாயத்தின் பக்கம் நாட்டம் செலுத்தி வருவதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது பாராட்டத்தக்கதென்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். இதில் பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.