நாட்டின் எப்பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவாளர் நாயக திணைக்கள தலைமையகத்தில் பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு 12 நாட்களில் மாத்திரம் 4 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட பிறப்புச்சான்றிதழ் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பிறப்புச்சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பதிவாளர் நாயக திணைக்கள தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.