ஈஸ்டர் தாக்கு:தல் தொடர்பாக ஏப்ரல் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வெளிநாட்டு புலனாய்வு தகவல்கள் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபரோ அரச புலனாய்வு துறை தலைவரோ எந்தவொரு சந்தர்ப்பத்;திலும்; தன்னை அறிவுறுத்தவில்லையென பொலிஸ் விசேட அதிரடி படையின் முன்னாள் கட்டளை அதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்திப் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் நேற்று சாட்சியமளித்தார்.
இதேநேரம் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் படி இஸ்லாமிய தீவிரதத்தின் ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அழுத்தங்கள் ஏற்படுமென சந்தேகித்த போதிலும் இதுபோன்ற பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாமென அந்த சந்தர்ப்பத்தில் நினைக்கவில்லையென்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆணைக்குழுவில் தெரிவித்தார்.
ஏப்ரல் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட புலனாய்வு தகவல்கள் உங்களுக்கு கிடைத்ததா என அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விணவிய போது 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி மாலை 6.43 அளவில் தனக்கு அது கிடைத்ததாக தெரிவித்தார். 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி உங்களுக்கு இந்த கடிதம்கிடைப்பதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர் தொடர்பு கொண்டாரா என விணவிய கேள்விக்கு இல்லையென்றும் அதன் பின்னர் ஒரு தினம் அதாவது ஏப்ரல் 10 ஆம் திகதி தான் பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தார். அப்போது தான் பிரான்சில் பயிற்சிக்கு சென்றிருந்ததாகவும் பயிற்சியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதாக தெரிவிப்பதற்கு பொலிஸ்மா அதிபரை தொடர்பு கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்\.
தான் இலங்கையில் இல்லாத போது ஏதேனும் விசேட சம்பவங்கள் இடம்பெற்றதா என தான் அவரிடம் கேட்டதாகவும் அப்படி எந்த விசேட சம்பவமும் இடம்பெறவில்லையென அவர் தெரிவித்ததாகவும் கூறினார்;. அசலாம் அலைக்கும் வெல்கம் என கூறி அவர் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.; ஏப்ரல் 20ஆம் திகதிக்குமுன்னர் பொலிஸ்மா அதிபர் உங்களோடு தொலைபேசியில் அல்லது கூட்டம் ஒன்றின்N பாது தொடர்பு கொண்டாரா எனவிணவிய கேள்விக்குபல கூட்டங்களில் கலந்து கொண்டதாகவும் தன்னிடம் குறிப்பு புத்தகம் இருப்பதாகவும் அந்த புத்தகத்தில் கூட்டங்கள் மற்றும் விசேட விடயங்கள் தொடர்பாக பதிவிடுவதாகவும் தெரிவித்தார். ஏப்ரல் 11 ஆம் திகதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்ததாகவும் அங்கு போதை பொருள் ஒழ்pப்பு மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக பேசியதாகவும் 11 ஆம் திகதி சந்திப்பின் பின்னர் பொலிஸ்;மா அதிபரை சந்தித்தாகவும் அவர் தெரிவித்தார். சுமார் 25 நிமிடங்கள் அவரோடு பேசியதாகவும் ஏப்ரல் 19 ஆம் திகதி மாலை நிலந்த ஜயவர்தன என்னோடு தொடர்பு கொண்:டு 16 ஆம் திகதி இடம்பெற்ற காத்தான்குடி வெடி சம்பவம் பற்றியும் விணவினார்.
அதன் பின்னர் ஒரு தினம்அறிக்கையொன்றை பெற்று இரவு 7.30 மணியளவில் இதுபற்றி நிலந்தவுக்கு தெளிவுப்படுத்தினேன். பின்னர் இந்திய அலுவலக அதிகாரியொருவரை சந்தித்ததாகவும் ஏப்ரல் 20 ஆம் திகதி அந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் தெரிவித்த அவர் புலனாய்வு தகவல் ஒன்று கிடைத்ததா என அவர் விணவியதாகவும் விசேட ஹோட்டல்கள் மீது தாக்குதல் ;நடத்துவதாக கூறப்பட்டதாகவும் அவர் கூறினார். புலனாய்வு துறை தலைவர் நிலந்த ஜயவர்தனவை தொடர்பு கொண்டு நான் இதுபற்றி விளக்கம் கூறியதாகவும் அவர் இந்த தகவல்கள் குறித்து என்னிடம் கூறாமைக்கான காரணம் என்னவென இன்றும் எனக்கு பிரச்சினையாகவே உள்ளதென தெரரிவித்தார். இந்த விடயம் பற்றி நீங்கள் நிலந்தவிடம் கேட்கவில்லையெனா ஆணைக்குழு விணவிய போது இல்லையென்றும் வெடி சம்பவம் பற்றியே பேசியதாகவும் புலனாய்வு தகவல்கள் குறித்து எழுத்து மூலம் அறிவிப்பார் என்றே நான் நினைத்தேன் என தெரிவித்தார்.
சஹ்ரான் கிழக்கில் இருப்பதாக நீங்கள் அறிந்து வைத்தீர்களா என சொலிசிட்டர் ஜெனரல் விணவிய போது தாக்குதலுக்கு பின்னர் ஏப்ரல் 22 ஆம் திகதி கூடிய பாதுகாப்பு கவுன்சிலிலேயே தான் இதுபற்றி அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தான் அழைக்கப்படுவதாகவும் பின்னர் அழைக்கவில்லையென்றும் தெரிவித்த அவர் சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்துமபண்டார, மற்றும் அமைச்சின் செயலாளராக இருந்த ஜகத் பி.விஜேவீர ஆகியோரிடம் எம்மையும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அழைக்க முடியுமா என கேட்ட போதும் எம்மை அழைக்கவில்லையென தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சாட்சியமளிக்கையில் அரச புலனாய்வு துறை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பல சந்தர்ப்பங்களில் இஸ்லாம் தீவிரவாதம் குறித்து பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தார்.அதன் ஊடாக தேசிய பாதுகாப்பு எந்தளவு அச்சுறுத்தல் ஏற்படுமென எம்மால் புரிந்து கொள்ள முடியாது போனாலும் ஏதேனும் குழப்பம் ஏற்படலாமென நாம் தெரிந்து வைத்திருந்தோம் என தெரிவித்தார். என்.டிஜே செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு கவுனிசிலில் பேசப்பட்டதா என விணவிய போது அதனை உறுதியாக கூற முடியாதென தெரிவித்தார்.
இஸ்லாம் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு பேரவையில் பேசும் போது முன்னாள் ஜனாதிபதி கூறியவை நினைவிருக்கிறதா என ஆணைக்குழு விணவியது. விசேடமாக எதுவும் இல்லை விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் கூறினார்.பிரதமர் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் எண விணவிய போது பல சந்தர்ப்பங்களில் அவர் செவிமடுத்ததை மாத்திரமே செய்தார். கடந்த அரசாங்கத்தின் போது பாதுகாப்பிலும் பார்க்க சக வாழ்விற்கே முன்னுரிமையளிக்கப்பட்டது என்பதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளன. அதனை ஏற்றுக் கொள்வீர்களா என விணவிய போது பாதுகாப்பிலும் ;பார்க்க சக வாழ்வில் முன்னுரிமையளிக்கபட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் முன்னரை விட சக வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 19 வது சீர்த்திருத்தில் ஜனாதிபதியின் பொறுப்பில் தேசிய ஐக்கியமும் சக வாழ்வும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கென பிரத்தியேக அமைச்சும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக அவர்தெரிவித்தார்.