காலி மாவட்டத்தில் இன்றைய தினம் மூவாயிரத்துக்கும் அதிகமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பத்தேகம கும்பே பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான இவ் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 10 லட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனொரு கட்டமாக கடந்த ஒரு வார காலத்திற்குள் நாடு முழுவதும் பிரதமர் தலைமையில் 10 ஆயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. முதற்கட்டமாக நுவரெலிய மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் இரத்தினபுரி , மொனராகலை, மாத்தறை பஸ்கொட, கேகாலை , ஆகிய மாவட்டங்களில் பிரதமர் தலைமையில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையிலேயே இன்றைய தினம் காலி பத்தேகம பகுதியில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறுவதாக அமைச்சர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.