திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் அவுக்கனை பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதனால் குறித்த பகுதிக்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிப்படைந்துள்ளது. ரயில் எஞ்சின் உட்பட 6 பெட்டிகள் மார்க்கத்திலிருந்து தடம்புரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் ரயிலை மார்க்கத்தில் நிலைநிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சேவையை வழமைக்கு கொண்டுவர மேலும் 6 மணித்தியாலங்கள் எடுக்கலாமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.