வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலகில் மிகப்பெரிய ஆழி பலகை அதாவது பிலக் பொயின்ட் ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
வவுனியாவை சேர்ந்த கனகேஸ்வரன் கதீஸ்வரன் எனும் இளைஞர் 3.2 கிலோவோட் சக்தியுடைய உலகில் மிகப்பெரிய மின்சார ஆழி பலகையை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். நாட்டுக்கு தம்மால் புகழ் ஈட்டி கொடுக்க முயன்றமைக்காக மகிழ்ச்சியடைவதாக கதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது உலக சாதனைக்காக விண்ணப்பித்தேன். அது நிராகரிக்கப்பட்டது. மீண்டும் 2017 ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் எனக்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. அதனை பின்பற்றி இதனை தயாரித்தேன். வவுனியாவிலிருந்து முதலாவது நபராக நான் இம்முயற்சியை மேற்கொண்டேன். தோல்வியை பற்றி நான் கவலைப்படவில்லை. அதனை தொடர்ந்து உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது என கதீஸ்வரன் தெரிவித்தார்.