அக்கரபத்தனை – டொரிங்டன் தோட்டத்தின் மேற்பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை (05) காலை சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.
சடலம் அடையாளம் காணமுடியாத வகையில் அழுகிக் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.