ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் நிதிஷ் ரெட்டி 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 202 எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 200 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதேவேளை ஐ.பி.எல். தொடரின் 51 ஆவது போட்டி இன்றைய தினம் மும்பை இந்தியன்;ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் இன்று இரவு இடம்பெறவுள்ளது.