நுவரெலியா, அம்பேவலை பாற் பண்ணைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள அம்பேவலை பால் உற்பத்தி நிலையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி இங்கு ஆராய்ந்தார்.
ஜனாதிபதி வழங்கியிருந்த ஆலோசனைகளுக்கமைய பால் உற்பத்தி நிலையத்தின் விரிவாக்கல் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த கண்காணிப்பு விஜயத்தின் போது அம்பேவலை பாற் பண்ணை குழுமத்தின் பொது முகாமையாளர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
பண்ணையில் பால் மாடுகள் காணப்படும் பகுதிகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அத்துடன் பண்ணையை பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கென அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.