நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதற்கமைய, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று வெலிங்டன் நகரில் திறக்கப்படுமென வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ஆராய்வதற்கென வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று நியுசிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது இதற்கான நோக்கமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.