விடுமுறையின்றி நீண்ட நாட்களாக பணிக்கு சமூகமளிக்காத இலங்கை இராணுவத்தின் இராணுவ வீரர்களுக்கு இன்று முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொது மன்னிப்பு காலம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதியில் தமது படைப்பிரிவு மையத்தை தொடர்பு கொள்வதன் ஊடாக சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்போது இராணுவ அடையாள அட்டையின் நகல், தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் புகைப்பட நகல் என்பன சமர்ப்பிக்கப்பட வேண்;டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.