மியன்மாரின் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் 8 பேரும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மியன்மாரிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மியன்மார் – தாய்லாந்து எல்லையில் ஆயுதம் ஏந்திய குழுக்களின் பிடியிலுள்ள ஏனைய இலங்கையர்களை மீட்பதற்கு இராஜதந்திர திட்டங்கள் அவசியமென மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக பண்டார தெரிவித்துள்ளார்.