சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறி கண்டி மாவட்டத்தில் பொருட்களை விற்பனை செய்த 86 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர கண்டி மாவட்ட நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் 17 வர்த்தகர்களுக்கு 50000 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விலையைக் காட்சிப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் எடையைச் சரியாக வைத்திருக்காமை மற்றும் விதிகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட நுகர்வோர் சேவை அதிகார சபை இந்த வருடம் மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 156 வழக்குகளைத் தாக்கல் செய்து மூன்று இலட்சத்து எண்பத்து மூவாயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் துஷார ரணபன தெரிவித்தார்.
நாவலப்பிட்டி, திகன, தெல்தெனிய, அக்குரணை, கலகெதர, முருதலாவ உள்ளிட்ட பல நகரங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், புத்தாண்டின் பின்னரும் இந்த சோதனைகள் தொடரும் என்றும் கண்டி மாவட்ட நுகர்வோர் சேவை அதிகார சபையின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி துஷார ரணபன தெரிவித்தார்.