இலங்கைக்கும் சர்வதேச கடன் வழங்குனர்களுடன் எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக ஜனாதிபதி பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மீண்டுமொருமுறை பேச்சுவார்த்தையொன்று எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 4 விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் இதன்போது இரு விடயங்களுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஏனைய இரு விடயங்கள்தொடர்பில் மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கைக்கு மிகவும் சாதகமான சூழல் காணப்படுகிறது.
கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் லண்டன் நகரில் கடன் வழங்குனர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இதன்போது நாட்டிற்கு பொருத்தமான பல யோசனைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
இலங்கை தரப்பிலிருந்து அவற்றிற்கு பதில் யோசனைகளும் முன்வைக்கப்பட்டதாக சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.