தொம்பே பூகொட பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பில் பொலிசார் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மதுபான உற்பத்திக்காக விஷ தன்மையுடைய உரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாடகை அடிப்படையில் பெற்று கொண்ட வீடு ஒன்றில் இருந்து குறித்த மதுபான உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பை முன்னெடுக்கும் போது அங்கிருந்து 20கும் அதிகமான பெரல்களில் சட்டவிரோத மதுபானம் காணப்பட்டதாகவும் அவற்றுக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.