கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூன் மாதம் தென்னாபிரிக்கா அணி இலங்கையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்தது. எனினும் தற்போது குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து – இலங்கை, இந்தியா – தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா – நியூசிலாந்து தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டியை விட வீரர்களின் பாதுகாப்பு நலனே முக்கியம் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.