சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல், களுத்துறைமாவட்டத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக களுத்துரையில் சிறைப்பட்டிருந்த 400 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்புடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் அவர்கள் அனுப்பப்பட்டனர். மேல் மாகாணத்தில் சிக்கியிருக்கும் மக்களை அனுப்பி வைக்கும் திட்டத்தின் கீழ் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். பிரதமரின் செயலகத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு, அநுராதபுரம், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு பண்டங்களை வழங்கியது மட்டுமல்லாமல் இசையை இரசிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.