யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டைமானாறு கடற்கரைப்பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சா போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. விற்பனைக்கென தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் கேரள கஞ்சா சங்காணை மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய இதுதொடர்பான சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதி விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.