பாகிஸ்தானில் பனிப்பொழிவு காரணமாக 14 பேர் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக புகையிரத மற்றும் பஸ் போக்குவரத்து சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. வீடுகளின் மேற்பரப்பில் அதிகமான அளவில் பனி படர்ந்ததாதல் சில வீடுகள் இடிந்து வீழந்துள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென பாகிஸ்தான் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.