ஆப்கானிஸ்தானில் பஸ்வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெராத் – காந்தகார் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். ‘பொதுமக்கள் மீதான இத்தகைய தாக்குதல் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாக அமைந்துளளதுடன் இதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.