கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மண்டகல் ஆற்று பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் புதையல் அகழ்வில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட அவிசாவளை மற்றும் பாதுக்க பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.