ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று தோல்வியடைந்தது.
ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஏழு மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தனர். முதலமைச்சர் அநுராதபுரம் தம்புத்தேகம பொதுகூட்டத்தில் உரையாற்றும் போது சபை உறுப்பினர்களை விமர்சித்ததாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் முதமைச்சர் சஸீந்திர ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் குமார சிறி ரட்நாயக்க, சபை முதல்வர் சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் முதலமைச்சரின் கூற்றை கண்டித்து எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டனர். அவர்கள் சுயாதீன உறுப்பினர்களாக செயற்படுவதாக தெரிவித்தனர். எதிர்கட்சியில் அமர்ந்து கொண்ட மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.