தெற்கு சூடான் நாட்டின் தலைநகராக ஜூபாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 24 பயணிகளுடன் புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விமானம் ஈரோல் நகரை நோக்கி செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அந்நகரின் அருகே உள்ள ஆற்றுக்குள் விழுந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 21 பேரில் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.