நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிய ஊழியர்கள் ஆயிரத்து 200 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். இவ் ஊழியர்கள் நேற்று அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,
நீர்ப்பாசன துறையில் ஆயிரத்து 201 பேர் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். 3 வருடங்கள் கழிந்தும் இவர்கள் இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை. அத்துடன் எமது திணைக்களத்தின் சுற்றறிக்கை மூலம் இவர்களுக்கான சலுகைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வங்கி கடன், பண்டிகை கால முற்பணம் போன்றவை இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இவர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவதற்கும் அவர்களுக்கு மறுக்கப்பட்ட நிவாரணங்களை அடுத்த வாரம் மு:தல் வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தார்.
இதேவேளை தம்மை நிரந்தரமாக்குவதற்கு அமைச்சர் தீர்மானித்தமைக்காக ஊழியர்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.