இந்தியாவில் யமுனை அதிவேக பாதையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 29 பேர் உயிரிழந்ததுள்ளனர். புதுடில்லி நகரின் அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து இடம்பெற்ற போது 46 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
லக்னோவிலிருந்து டெல்லி நோக்கி இப்பஸ் பயணம் செய்து கொண்டிருந்தது. அதிக வேகம் மற்றும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே இவ்விபத்து காரணமாக இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ் இவ் அதிவேக பாதையிலிருந்து சருக்கி சென்று 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்துள்ளது. விபத்தில் இறந்தோருக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்கப்படுமென உத்தர பிரதேச போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.