அமெரிக்காவின் அரச ஊழியர்களுக்ககான சம்பள கொடுப்பனவில் முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது. மத்திய நிறுவனங்கள் முன்னெடுத்த பகுதிநேர பணிபகிஷ்கரிப்பே இதற்கு காரணமாகும். நூற்றுக்கும் அதிகமான அரச ஊழியர்களுக்கு இவ்வருட ஆரம்பத்திற்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென தெரியவந்துள்ளது. இதனால் ஊழியர்கள் ஊதியமின்றி கடமையாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறைச்சாலை ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உட்பட பல பிரிவுகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையென அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த மாதம் முதல் அமெரிக்க மத்திய நிறுவனங்கள் பகுதிநேரமாக முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பு காரணமா அந்நாட்டின் அரச நிறுவனங்களின் செயற்பாடு முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.