இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயணித்த ஜனாதிபதி அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில் இந்திய குடியரசு தலைவரையும் இன்றையதினம் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.
இருநாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவு, பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை பலப்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா முன்வந்துள்ளது.