மண்மேடு விழுந்ததால் தடைபட்டிருந்த ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் வழக்கம் போல் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரவுநேர தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் ஆகியவை தற்போது மீண்டும் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.