பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வகையில்; உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.