அரச பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர் குழுவில் காணப்படும் பற்றாக்குறை, மாணவர்களின் விடுதி பிரச்சினைகள், மாணவர் நிவாரண கொடுப்பனவு செயன்முறைகளை நெறிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.