ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் இன்று (21) காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்ததுடன் 25 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.